Home இலங்கை சமூகம் கிளப் வசந்த படுகொலை: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

கிளப் வசந்த படுகொலை: சந்தேக நபர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு

0

கிளப் வசந்த என்று அழைக்கப்படும் சுரேந்திர வசந்த பெரேராவின் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை செப்டம்பர் 2ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கடுவலை(Kaduwela) நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சந்தேக நபர்கள் பலத்த பாதுகாப்புடன் கடுவலை நீதவான் நீதிமன்றில் இன்று (20) முன்னிலைப்படுத்தபட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இவர்கள் காவல்துறை விசேட அதிரடிப்படையினரின் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் சந்தேகநபர்கள் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

கிளப் வசந்த படுகொலை 

கடந்த ஜூலை மாதம் 08ஆம் திகதி அத்துருகிரிய பிரதேசத்தில் உள்ள பச்சை குத்தும் நிலையம் ஒன்றின் திறப்பு விழாவின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் கிளப் வசந்த உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், பாடகியான கே. சுஜீவா உட்பட 4 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

இதனையடுத்து, காவல்துறையினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், கிளப் வசந்தவின் கொலை சம்பவத்துடன் தொடர்புடைய பெண் உட்பட 10 பேர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/club-vasanth-murder-suspects-remand-extended-1724138210

NO COMMENTS

Exit mobile version