Home இலங்கை சமூகம் சந்தையில் தேங்காய் விலையில் மாற்றம்…! மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

சந்தையில் தேங்காய் விலையில் மாற்றம்…! மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்

0

நாடளாவிய ரீதியில் கடந்த வாரத்தை விட சந்தையில் தேங்காயின் விலை படிப்படியாக குறைந்து வருவதாக சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

கடந்த வாரம் 250 ரூபாவாக இருந்த சராசரி அளவு தேங்காய் ஒன்றின் விலை 200 முதல் 220 ரூபா வரை குறைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.

எவ்வாறாயினும், சீரற்ற காலநிலை காரணமாக எதிர்காலத்தில் தேங்காய் விலை குறித்து உறுதியான அறிவிப்பை வெளியிட முடியாது எனவும் வர்த்தகர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

தேங்காய் விலையில் மாற்றம்

இதேவேளை, எதிர்வரும் மே மாதத்தின் பின்னர் தேங்காய் விலையில் மாற்றம் ஏற்படுமென்று எதிர்பார்ப்பதாக தெங்கு அபிவிருத்தி அதிகாரசபை (Coconut Development Authority) தெரிவித்துள்ளது.

தேங்காய் மற்றும் தேங்காய் சார் பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்களை இறக்குமதி செய்யும் நடவடிக்கைகள் எதிர்வரும் சில நாட்களில் ஆரம்பமாகுமென்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க (Shantha Ranatunga) குறிப்பிட்டுள்ளாா்.

 அவர் மேலும் தெரிவிக்கையில், இந்த வருடத்தின் முதல் நான்கு மாதங்களில் 200 மில்லியன் தேங்காய்களை அறுவடை செய்ய முடியுமென தெங்கு ஆராய்ச்சி நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.

அறுவடை வீழ்ச்சியால் ஏற்படும் பற்றாக்குறையை நிரப்ப தேங்காய் பால், தேங்காய் பால் மா மற்றும் தேங்காய்களை இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சாந்த ரணதுங்க (Shantha Ranatunga) தெரிவித்துள்ளார்.

NO COMMENTS

Exit mobile version