Home இலங்கை பொருளாதாரம் விண்ணை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

விண்ணை தொட்ட கொழும்பு பங்குச் சந்தை

0

கொழும்பு பங்குச் சந்தையின் (Colombo Stock Exchange) அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) இன்று (26.12.2024) 232.13 புள்ளிகளால் அதிகரித்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 15400.53 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.

இது புதிய அதிகரிப்பு என்று தெரிவிக்கப்படுகின்றது.

இன்றைய பரிவர்த்தனைகளின் முடிவில், மொத்த புரள்வு 07 பில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டுள்ளது.

விலைச் சுட்டெண்

இதேவேளை கடந்த 23ஆம் திகதி காலை 11.45 மணி வரையான கொழும்பு பங்குச் சந்தையின் நடவடிக்கைகளின் அடிப்படையில், அனைத்துப் பங்கு விலைச் சுட்டெண் (ASPI) 245 புள்ளிகளாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, கொழும்பு பங்கு சந்தையின் அனைத்து பங்குகளின் மொத்த விலை சுட்டெண் அன்றைய நாளில் 15,000 புள்ளிகளை கடந்தது.

மேலும், 23ஆம் திகதி வர்த்தக நாளில் காலை 11.45 மணி வரை பங்குச் சந்தையின் மொத்த புரள்வு 5 பில்லியன்களாக பதிவாகி உள்ளதாகவும் கொழும்பு பங்குச் சந்தை குறிப்பிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

you may like this…!

https://www.youtube.com/embed/fJiASOR3zIo

Source: https://ibctamil.com/article/colombo-stock-exchange-today-reat-1735211352

NO COMMENTS

Exit mobile version