Home இலங்கை சமூகம் பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த நடத்துநருக்கு நேர்ந்த துயரம்

பேருந்திலிருந்து தவறி வீழ்ந்த நடத்துநருக்கு நேர்ந்த துயரம்

0

 திருகோணமலை தம்பலகாமம் பாலம்போட்டாறு பகுதியை இணைக்கும் காவல்துறை சோதனைச்
சாவடிபிரதான வீதி அருகில் இன்று (20)
காலை பேருந்தில் இருந்து தவறி விழுந்ததில் பேருந்த நடத்துநர் உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை 5ம் கட்டை பகுதியை சேர்ந்த லலித் குமார வயது (41)
குடும்பஸ்தர் என காவல்துறையினர் தெரிவிக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

பேருந்தில் ஓடிச் சென்று ஏறும்போது நிகழ்ந்த விபரீதம்

பாலம்போட்டாறு கண்டி திருகோணமலை
வீதியில் உள்ள கோயில் உண்டியலில் காணிக்கை போட்டு விட்டு மீண்டும்
பேருந்தில் ஓடிச் சென்று ஏறிய போது தவறி விழுந்ததில் தலை அடிபட்ட நிலையில்
உயிரிழந்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனை மூலம் தெரியவருகிறது. 

தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில் சடலம் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக
விசாரனைகளை தம்பலகாமம் காவல்துறையினர்் முன்னெடுத்துள்ளனர்.

 

NO COMMENTS

Exit mobile version