Home இலங்கை அரசியல் புதிய காவல்துறை மா அதிபர் நியமனம் : நாளை கூடவுள்ள அரசியலமைப்பு சபை

புதிய காவல்துறை மா அதிபர் நியமனம் : நாளை கூடவுள்ள அரசியலமைப்பு சபை

0

இலங்கையின் 37வது காவல்துறை மா அதிபர் (IGP) நியமனம் குறித்து விவாதிப்பதற்காக அரசியலமைப்பு சபை நாளை கூடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தேசபந்து தென்னகோன் (Deshabandu Tennakoon) காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதைத் தொடர்ந்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, காவல்துறை மா அதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவை (Priyantha Weerasuriya) முன்மொழிந்துள்ளார்.

இந்த நிலையில் இது தொடர்பான கலந்துரையாடல் நாளை (12) பிற்பகல் 1:30 மணிக்கு சபாநாயகர் தலைமையில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அங்கீகரித்த ஜனாதிபதி

இதேவேளை தேசபந்து தென்னகோனை காவல்துறை மா அதிபர் பதவியில் இருந்து நீக்குவதற்கான தீர்மானம் கடந்த 5ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

குறித்த பதவி நீக்கத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க (Anura Kumara Dissanayake) அங்கீகரித்த பின்னர் பதவி நீக்குவதற்கான கடிதம் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அனுப்பப்பட்டது.

அதனைத் தொடர்ந்து தேசபந்துவை பதவியில் இருந்து நீக்கும் கடிதம் கடந்த 06ஆம் திகதி பொது பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகளால் அவரது இல்லத்தில் வைத்து அவருக்கு வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version