சமகால அரசியல் நிலவரம் தொடர்பான தமிழ் தேசிய பேரவை மற்றும் தமிழ்தேசிய மக்கள்
முன்ணனியின் ஏற்பாட்டில் ஊடகவியலாளர்களுடனான கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடல் இன்றைய தினம்(19) சனிக்கிழமை நடைபெற்றது.
அரசியல் நிலவரம்
யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விடுதியில் தமிழ் தேசிய மக்கள் முன்ணனியின்
தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையில் குறித்த கலந்துரையாடல் நடைபெற்றது.
இந்த கலந்துரையாடலில் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் ,
வேலணை பிரதேச சபை உறுப்பனர் நாவலன் சட்டத்தரணி க.சுகாஸ் மற்றும்
ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர்.
