Home சினிமா குக் வித் கோமாளி 5 ஜெயித்தது குறித்து பெரிய பதிவு போட்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே

குக் வித் கோமாளி 5 ஜெயித்தது குறித்து பெரிய பதிவு போட்டுள்ள பிரியங்கா தேஷ்பாண்டே

0

குக் வித் கோமாளி 5

குக் வித் கோமாளி 5, விஜய் தொலைக்காட்சியில் மிகவும் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வந்த நிகழ்ச்சி இது.

சமையல் ப்ளஸ் கலாட்டா என்ற கான்செப்டில் ஒளிபரப்பான இந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்கள் கூட்டம் அதிகம்.

கடந்த ஏப்ரல் மாதம் குக் வித் கோமாளி 5வது சீசன் ஒளிபரப்பாக தொடங்கியது, தற்போது செப்டம்பர் மாதம் முடிவையும் எட்டிவிட்டது.

படமே ரிலீஸ் ஆகவில்லை, பல கோடி ப்ரீ புக்கிங்கில் வசூலித்த ரஜினியிப் வேட்டையன்… மொத்த கலெக்ஷன்

இந்த 5வது சீசனின் வெற்றியாளராக பிரியங்கா தேஷ்பாண்டே தேர்வாகியுள்ளார், அவருக்கு ரூ. 5 லட்சம் பரிசும் கொடுக்கப்பட்டுள்ளது.

பிரியங்கா

இந்த நிலையில் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியின் டைட்டிலை வென்ற பிரியங்கா தேஷ்பாண்டே இந்த சீசனிற்கான தனது பயணத்தை பற்றி பெரிய பதிவு போட்டுள்ளார். 

அதில் அவர், என்னைச் சுற்றியிருப்பவர்களை எப்போதுமே சௌகரியமாக உணர வைப்பதில் பெருமை கொள்கிறேன்.

கிச்சன் சூப்பர் ஸ்டார் நிகழ்ச்சியில் தோல்வி அடைந்தேன், ஆனால் 10 வருடங்களுக்கு பிறகு குக் வித் கோமாளியின் கோப்பை என் கையில் உள்ளது. சமையலறையில் என் திறமைகளை மெருகேற்ற உதவிய எனது பயிற்சியாளர்களுக்கு நன்றி.

ஊக்கப்படுத்தி என்னை சிறந்த சமையல்காரராக மாற்றிய அனைவருக்கும் நன்றி, எனக்கு நான் மட்டுமே போட்டியாளர் என பெரிய பதிவு போட்டுள்ளார்.

NO COMMENTS

Exit mobile version