Home இலங்கை சமூகம் சற்றுமுன்னர் தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு! தம்பதியினர் பலி

சற்றுமுன்னர் தென்னிலங்கையில் துப்பாக்கி சூடு! தம்பதியினர் பலி

0

தங்காலை – உனாக்குருவ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் தம்பதியினர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவமானது இன்று (18) மாலை 6.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

9 மி.மீ ரக துப்பாக்கியை பயன்படுத்தி இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலதிக விசாரணை

உயிரிழந்தவர்கள் 68 மற்றும் 59 வயதுகளையுடைய தம்பதியினர் என தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பில் தங்காலை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version