Home இலங்கை சமூகம் புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கதிர்காமத்தில் குவிந்த சனத்திரள்

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு கதிர்காமத்தில் குவிந்த சனத்திரள்

0

புத்தாண்டு பிறப்பை முன்னிட்டு நடைபெற்ற வைபவங்களில் கலந்து கொள்ள கதிர்காமத்தில் இம்முறை பெரும் சனத்திரள் ஒன்றுகூடியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கடந்த 13, 14, 15ஆம் திகதிகளில் நடைபெற்ற புத்தாண்டு தின வழிபாடுகளில் இலங்கையின் பௌத்த மற்றும் இந்து பக்தர்கள் மட்டுமன்றி வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் கணிசமான அளவில் கலந்து கொண்டுள்ளனர்.

இதன்போது, இந்த வருட புத்தாண்டு வழிபாடுகளில் ஒரு இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டுள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது.

பாரிய சனத்திரள்

கடந்த 2017ஆம் ஆண்டின் பின்னர் இந்த ஆண்டிலேயே கதிர்காமத்தில் இந்தளவுக்கு பாரிய சனத்திரள் ஒன்றுகூடியுள்ளமை குறிப்பிடத்தக்கது.  

NO COMMENTS

Exit mobile version