Home இலங்கை சமூகம் மக்களே அவதானம் – A9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற கார் – இருவர் பலி

மக்களே அவதானம் – A9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற கார் – இருவர் பலி

0

ஏ 9 வீதியில் நீரில் அடித்துச் சென்ற நிலையில் மீட்கப்பட்ட கார் உள்ளே இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

குறித்த சம்பவமானது ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமாயில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,  ஏ9 வீதி சாந்தசோலை சந்திக்கு அருகாமையில் கார் ஒன்று அடித்து
செல்லப்பட்டுள்ளதை அவதானித்த கிராம மக்கள் பொலிஸார் மற்றும் இராணுவத்தினருக்கு
தகவல் வழங்கியுள்ளனர்.

ஆண் மற்றும் பெண்

குறித்த தகவலினை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த இராணுவம் மற்றும் பொலிஸார்
கிராம இளைஞர்களுடன் இணைந்து குறித்த காரினை மீட்டுள்ளனர்.

மீட்கப்பட்ட காரினை மீடடுள்ளதுடன், காரில் பயணித்த ஆண் மற்றும் பெண் ஒருவர்
சடலங்களும் மீட்கப்பட்டுள்ளது.

உடற்கூற்று பரிசோதனைக்காக சடலம் வவுனியா வைத்தியசாலைக்கு கொண்டு
செல்லப்பட்டதுடன், மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்டு
வருகின்றது.

இதேவேளை குறித்த வீதியானது சீரற்ற காலநிலையால் வெள்ளநீர் வீதியை மூடி செல்வதன்
காரணமாக நேற்று இரவு முதல் மூடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version