Home இலங்கை சமூகம் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு

நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு

0

கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட
சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு மீதான வழக்கின் தீர்ப்புக்காக வேறொரு திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் – நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பிறகு காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பான குறித்த வழக்கு யாழ். மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.

சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க
எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிமான் நீதிமன்றத்தில்
பாரப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தது.

வேறொரு திகதி அறிவிப்பு

இந்த நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக இன்றையதினம் (30) திகதியிடப்பட்டிருந்தது.

எனினும் சாவகச்சேரி நீதிமன்ற நீதிவான் இன்றையதினம் விடுமுறையில் இருந்த காரணத்தினால் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 2ஆம் நாள் – திருவிழா

NO COMMENTS

Exit mobile version