Home இலங்கை சமூகம் யாழில் மகளை அழைத்துவர சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்

யாழில் மகளை அழைத்துவர சென்ற தந்தைக்கு நேர்ந்த துயரம்

0

புத்தாண்டு விடுமுறைக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மகள் யாழ்ப்பாணம் வந்தபோது, அவரை அழைத்துச் செல்வதற்காக சென்ற தந்தை விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளார்.

புன்னாலை கட்டுவான் வடக்கு சந்திக்கு அருகில் நேற்றுமுன்தினம் (12) குறித்த விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த விபத்தில் கிழக்கு பலாலியைச் சேர்ந்த கந்தவனம் செல்வநாயகம் (வயது 62) என்பவரே உயிரிழந்துள்ளார்.

மேலதிக விசாரணை

புத்தாண்டு விடுமுறைக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தில் இருந்து வந்த தனது மகளை அழைத்துச் செல்வதற்காக, உயிரிழந்த நபர் அதிகாலையில் பலாலியில் உள்ள தனது வீட்டிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார்.

அதன்போது, மழை பெய்து கொண்டிருந்த நிலையில், பழுதடைந்து வீதியில் நிறுத்தப்பட்டிருந்த உழவு இயந்திரப் பெட்டியுடன் அவர் பயணித்த மோட்டார் சைக்கிள் மோதி இந்த துயர சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், விபத்து தொடர்பாக உழவு இயந்திரத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதோடு, மேலதிக விசாரணைகளை சுன்னாகம் காவல்துறையினர் மேற்கொண்டுள்ளனர்.  

NO COMMENTS

Exit mobile version