Home விளையாட்டு முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரருக்கு கிடைக்கப்போகும் தண்டனை

முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரரருக்கு கிடைக்கப்போகும் தண்டனை

0

 முன்னாள் அவுஸ்திரேலிய துடுப்பாட்ட வீரர் டேவிட் வோர்னர், கடந்த ஏப்ரல் மாதம் சிட்னியில் நடத்தப்பட்ட திடீர் சுவாசப் பரிசோதனையைத் தொடர்ந்து, மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டார்.

கடந்த மே மாதம் நடந்த நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு, அந்த கிரிக்கெட் வீரர் தனது பொறுப்பை ஏற்றுக்கொள்வதாகவும், தனது நடத்தை “முட்டாள்தனமானது” மற்றும் “பொறுப்பற்றது” என்பதை அவர் அறிந்திருந்தார் 
என்றும் அவரது வழக்கறிஞர் பாபி ஹில் கூறியதால், இந்த ஒப்புதல் வாக்குமூலம் எதிர்பார்க்கப்பட்டது.

உயிர்த்த ஞாயிறு அன்று சம்பவம்

ஈஸ்டர் ஞாயிறன்று தனது காரில் ஏறுவதற்கு முன்பு, வோர்னர் ஒரு நண்பரின் குடியிருப்பில் மூன்று கிளாஸ் வைன் அருந்தியதாக முந்தைய விசாரணையில் ஹில் கூறினார்.

ஓகஸ்ட் 18 அன்று தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. அன்று வோர்னருக்கு குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்கு வாகனம் ஓட்டத் தடை, A$2,200 ($1,500; £1,150) வரை அபராதம் மற்றும் ஒன்பது மாதங்கள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்.

2024-ல் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற வோர்னர், தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் அணியான கராச்சி கிங்ஸ் மற்றும் சிட்னி தண்டர் அணிகளின் தலைவராக உள்ளார்.

Source: https://ibctamil.com/article/david-warner-pleads-guilty-to-drink-driving-1784715952

NO COMMENTS

Exit mobile version