Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்: தொடரும் விசாரணைகள்

தமிழர் பகுதியில் சடலமாக மீட்கப்பட்ட குடும்பஸ்தர்: தொடரும் விசாரணைகள்

0

திருக்கோணமலை (Trinco) – கிண்ணியா காவல்துறை பிரிவுக்குட்பட்ட, ஆலாங்கேணி பிரதேசத்தையும் பைசல் நகர்
பிரதேசத்தையும் இணைக்கின்ற பாலத்தடியில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது, நேற்று (20) இரவு மீட்கப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிண்ணியா, மஹரூப் நகர், 3 ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த ஐந்து பிள்ளைகளின்
தந்தையான முஹம்மது லெப்பை முபாரக் (60 வயது) என்பவரே இவ்வாறு சடலமாக
மீட்கப்பட்டுள்ளார்.

மேலதிக விசாரணை

நேற்று (20) மாலை 5.00 மணிக்கு கடைக்கு செல்வதாக மனைவியிடம் கூறிவிட்டு,
வந்தவர் என்று ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரிய வந்திருப்பதாகவும், இரவு 7
மணி அளவில் சடலம் மீட்கப்பட்டதாகவும் காவல்துறையினர் மேலும் தெரிவித்துள்ளனர்.

சடலம் கிண்ணிய வைத்திய சாலையில் வைக்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக திருகோணமலை
பொது வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கிண்ணியா காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/dead-body-of-a-man-recovered-trinco-kinniya-1724196927

NO COMMENTS

Exit mobile version