Home இலங்கை சமூகம் கொழும்பு புறநகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

கொழும்பு புறநகர் பகுதியில் மீட்கப்பட்டுள்ள சடலம்: தீவிர விசாரணையில் காவல்துறையினர்

0

கொழும்பு புறநகர் பகுதியான வத்தளை(Wattala) – எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

குறித்த சடலமானது இன்று(20) காலை காவல்துறையினரால் மீட்கப்பட்டுள்ளது.

மேலதிக விசாரணை

எலகந்த பகுதியில் அமைந்துள்ள கால்வாயில் சடலம் ஒன்று காணப்படுவதாக பொதுமக்கள் காவல்துறையினருக்கு தெரியப்படுத்தியதையடுத்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் சடலத்தை மீட்டுள்ளனர்.

இந்நிலையில், சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

NO COMMENTS

Exit mobile version