Home இலங்கை குற்றம் பலத்த அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

பலத்த அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்பு

0

பலத்த அடிகாயங்களுடன் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குருநாகல் பொலிஸ் பிரிவில் உள்ள ஜெயந்திபுர வீதியில் இருந்து நேற்று (12) இந்தச் சடலம் மீட்கப்பட்டுள்ளது என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலதிக விசாரணை

குறித்த சடலத்தில் பலத்த அடிகாயங்கள் காணப்படுகின்றன என்றும், சடலம் இதுவரை
யாருடையது என அடையாளம் என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் இறந்தவர் சுமார் 55 வயதுடையவர் என்றும், 5 அடி 6 அங்குல உயரம் உடையவர்
என்றும், நீல நிற முழுக்கை சேட் மற்றும் காற்சட்டை அணிந்தவர் என்றும்
பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சடலம் குருநாகல் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குருநாகல் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://tamilwin.com/article/death-body-of-man-with-injuries-recovered-1744551484

NO COMMENTS

Exit mobile version