சீரற்ற காலநிலையால் ஏற்பட்ட அனர்த்தங்களின் காரணமாக உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 474ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும், காணாமல் போனோரின் எண்ணிக்கை 356 என தேசிய அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இதன்படி, கண்டி, பதுளை, நுவரெலியா, குருநாகல் உள்ளிட்ட மாவட்டங்களில் மிக அதிகளவான மரணங்கள் பதிவாகியுள்ளன.
இதன்படி, கண்டி மாவட்டத்தில் இதுவரை 118 பேர் உயிரிழந்துள்ளதுடன் 171 பேர் காணாமல் போயுள்ளனர்.
நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை 89 பேர் உயிரிழந்துள்ளதுடன் 73 பேர் காணாமல் போயுள்ளனர்.
இவ்வாறு நாட்டில் இடம்பெற்ற பல முக்கியமான அரசியல், சமூக, பொருளாதார செய்திகளை உள்ளடக்கிய லங்காசிறியின் விசேட செய்தி தொகுப்பு இதோ….
