Home உலகம் உக்ரைன் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் ஆயுத களஞ்சியம்: ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்

உக்ரைன் அதிரடி தாக்குதல் : பற்றி எரியும் ஆயுத களஞ்சியம்: ரஷ்யாவில் அவசரநிலை பிரகடனம்

0

உக்ரைன்(ukraine) இன்று (07) நடத்திய ட்ரோன் தாக்குதலால் ரஷ்யாவின் வோரோனேஜ் பகுதியில் உள்ள ஆயுத கிடங்குகள் பற்றி எரிவதால் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டது என்று பிராந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.

ரஷ்ய(russia)பாதுகாப்பு அமைப்பால் பல ட்ரோன்கள் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆயுத கிடங்கில் பற்றியது தீ

இந்நிலையில், அபாயப் பகுதிகளில் உள்ள மக்களை தற்காலிகமாக வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உக்ரைனின் குறி

 ரஷ்ய ஆளில்லா விமானம் மற்றும் ஏவுகணை தாக்குதல்களால் உக்ரைன், அதன் ஆற்றல் மற்றும் குடிமக்கள் உள்கட்டமைப்பு முற்றிலுமாக சிதைந்துள்ளது, இதனையடுத்து ரஷ்யாவில் தொழில்துறை வசதிகளை உக்ரைன் குறிவைக்கத் தொடங்கியுள்ளது. 

NO COMMENTS

Exit mobile version