Home இலங்கை குற்றம் தீபாவளியன்று விசேட சுற்றிவளைப்பு: 4534 பேர் கைது

தீபாவளியன்று விசேட சுற்றிவளைப்பு: 4534 பேர் கைது

0

தீபாவளி பண்டிகை தினமான திங்கட்கிழமை நாடளாவிய ரீதியில்
மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் 4 ஆயிரத்து 534 பேர் கைது
செய்யப்பட்டுள்ளனர்.

இந்தத் தகவலை பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

சுற்றிவளைப்பு நடவடிக்கை

பொலிஸ் அதிகாரிகள், இராணுவத்தினர், பொலிஸ் விசேட அதிரடிப் படையினர் மற்றும்
கடற்படையினர் ஆகியோர் இணைந்து இந்தச் சுற்றிவளைப்பு நடவடிக்கையை
மேற்கொண்டுள்ளனர்.

இந்த விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது, பல்வேறு குற்றச் செயல்களுடன்
தொடர்புடைய 21 பேரும், சந்தேகத்தின் பேரில் 641 பேரும், பிடியாணை உத்தரவு
பிறப்பிக்கப்பட்ட 241 பேரும், திறந்த பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்ட 174
பேரும், மதுபோதையில் வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 31 சாரதிகளும்,
கவனக்குறைவாக வாகனங்களைச் செலுத்தியமை தொடர்பில் 17 சாரதிகளும், ஏனைய
போக்குவரத்து விதிமுறைகளை மீறியமை தொடர்பில் 3 ஆயிரத்து 409 பேரும் கைது
செய்யப்பட்டுள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. 

NO COMMENTS

Exit mobile version