Home இலங்கை குற்றம் யாழில் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு

யாழில் அதிரடிப்படையினரால் சுற்றிவளைக்கப்பட்ட வீடு

0

இளைஞர்களை தவறான வழிமுறைக்கு தூண்டும் வகையில் செயற்பட்ட நபரொருவரின் வீடு இன்று
யாழில் பொலிஸ் மற்றும் விசேட அதிரடிப் படையினரால் சுற்றி வளைக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் பொலிஸார் பெற்றுக்கொள்ளப்பட்ட தேடுதல்
அனுமதிக்கமைய யாழ்ப்பாணம் முளவை சந்தி அருகில் உள்ள வீடொன்றிலேயே இன்று
அதிகாலை குறித்த சோதனை நடத்தப்பட்டது.

அண்மைக்காலத்தில் இளைஞர்களிடம் வன்முறையை தூண்டும் வகையில் தனது பிறந்த நாள்
கொண்டாட்ட காணொளியை பதிவேற்றம் செய்தமை, சட்டவிரோத சொத்து குவிப்பு என்ற
குற்றச்சாட்டின் பேரில் குறித்த நபரின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டது.

குறித்த நபர் வீட்டில் இல்லாத நிலையில் அங்கு இரண்டு மோட்டார் சைக்கிள்
கைப்பற்றப்பட்டதுடன், இரண்டு பேர் கைது செய்யப்பட்டு பொலிஸ் நிலையத்தில்
தடுத்து வைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.என பொலிசார்
தெரிவித்தனர்.

NO COMMENTS

Exit mobile version