இலங்கையில் சீரற்ற காலநிலை காரணமாக டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்து
வருகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக எதிர்வரும் 19ஆம் திகதி முதல் விசேட நுளம்பு ஒழிப்பு வாரம்
பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
நாட்டில் இவ்வருடம் இதுவரை 19 ஆயிரத்து 724 டெங்கு நோயாளர்கள்
கண்டறியப்பட்டுள்ளனர்.
அதிக நோயாளர்கள்
அவர்களில் அதிகமானவர்கள் மேல் மாகாணத்தில் இருந்தே
பதிவாகியுள்ளனர் என்று டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
