Home இலங்கை கல்வி தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

தரம் 5 புலமைப்பரிசில் தொடர்பில் பரீட்சைகள் திணைக்களம் வெளியிட்ட அறிவிப்பு – செய்திகளின் தொகுப்பு

0

2024ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பில் பரீட்சைகள்
திணைக்களம் முக்கிய அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.

குறித்த அறிவிப்பில், புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அனைத்து மேலதிக
வகுப்புகள், விரிவுரைகள் அல்லது பயிற்சிப் பட்டறைகள் அனைத்தும் செப்டம்பர் 11
நள்ளிரவு முதல் நிறுத்தப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, புலமைப்பரீட்சைக்கான ஊகத்தின் அடிப்படையிலான வினாக்கள் அடங்கிய
வினாப்பத்திரங்களை அச்சிடுவதற்கும் வெளியிடுவதற்கும் தடை
விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்தோடு, பரீட்சை
வினாப்பத்திரத்திலுள்ள வினாக்களை அல்லது அதற்குச் சமமான வினாக்களை
வழங்குவதாகவோ சுவரொட்டிகள், பதாகைகள், கையேடுகள் மூலம் வெளியிடுவதற்கு தடை
விதிக்கப்பட்டுள்ளது.

இவை உள்ளிட்ட மேலும் பல செய்திகளை உள்ளடக்கி வருகின்றது இன்றைய நாளுக்கான காலை நேர செய்திகளின் தொகுப்பு..

NO COMMENTS

Exit mobile version