இலங்கையின் முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னக்கோனை படுகொலை செய்ய சதித் திட்டம் தீட்டப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பிரபல பாதாள உலகக் குழுத் தலைவர்களில் ஒருவரான கஞ்சிபானி இம்ரான் தரப்பு இந்த சதித் திட்டத்தை தீட்டியுள்ளதாக பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த விடயம் தொடர்பில் தேசபந்து தென்னக்கோனுக்கு, உயர் பொலிஸ் அதிகாரியொருவர் தகவல் வழங்கியுள்ளார்.
தேசபந்து தென்னக்கோன் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட போது அவருக்கு வழங்கப்பட்டிருந்த பாதுகாப்பு நீக்கிக்கொள்ளப்பட்டது.
பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்ட போதிலும் அவருக்கு முன்னதாக வழங்கப்பட்ட பாதுகாப்பு மீளவும் வழங்கப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
