டிக் டாக்கில் வீடியோ வெளியிட்டு பிரபலம் ஆனவர் இலக்கியா. டிக் டாக் தடை செய்யப்பட்ட பிறகு இன்ஸ்டா, யூடியூப் என கவர்ச்சி வீடியோக்கள் வெளியிட்டு இணையத்தில் பிரபலமாக இருக்கிறார்.
இந்நிலையில் இலக்கியா இன்று அதிக அளவு மாத்திரைகள் சாப்பிட்டதால் மயக்கமாகி மருத்துவமனையில் அட்மிட் ஆகி இருக்கிறார்.
தனது தற்கொலைக்கு ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் தான் காரணம் என இலக்கியா பதிவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் அந்த பதிவை பின்னர் நீக்கிவிட்டு அது fake news என பதிவிட்டு இருக்கிறார்.
மருத்துவமனையில் இருக்கும் இலக்கியா தான் இரண்டாவது பதிவை போட்டாரா என சிலர் சந்தேகமும் எழுப்பி வருகின்றனர்.
திலீப் சுப்பராயன் விளக்கம்
இந்நிலையில் திலீப் சுப்பராயன் இது பற்றி விளக்கம் கொடுத்து அறிக்கை வெளியிட்டு இருக்கிறார்.
“அந்த பதிவில் எந்த உண்மையும் இல்லை, முற்றிலும் பொய்” என திலீப் சுப்பராயன் கூறி இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/dhilip-subbarayan-statment-on-elakkiya-news-1753464941
