Home சினிமா சசிகுமார் முகத்தில் மிதிக்க சொன்னேன்.. பல அதிர்ச்சி ஊட்டும் தகவலை பகிர்ந்த இயக்குனர் இரா.சரவணன்

சசிகுமார் முகத்தில் மிதிக்க சொன்னேன்.. பல அதிர்ச்சி ஊட்டும் தகவலை பகிர்ந்த இயக்குனர் இரா.சரவணன்

0

 நந்தன்

சசிகுமார் நடிப்பில் ‘கத்துக்குட்டி’, ‘உடன்பிறப்பே’ போன்ற நல்ல படங்களை இயக்கி தமிழ் சினிமாவில் பிரபலமான இரா.சரவணன் இயக்கத்தில் கடந்த வாரம் வெளிவந்த படம் நந்தன்.

ஜிப்ரான் இசையமைப்பில் சசிக்குமாருடன் பாலாஜி சக்திவேல், சமுத்திரகனி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

இந்த படத்திற்கு பலர் வாழ்த்து தெரிவித்து வருகின்ற நிலையில், படத்தின் இயக்குனரான இரா. சரவணன் அவரது ட்விட்டர் தளத்தில் சசிகுமாருக்கு மன்னிப்பு கூறி ஒரு பதிவை பகிர்ந்துள்ளார்.

 இரா.சரவணன்  பதிவு 

அதில், “நந்தன் படத்திற்காக சசிகுமார் பல விஷயங்களை பொறுத்து கொண்டார். அவர் இடத்தில் வேறு ஒருவர் இருந்திருந்தால் ‘போடா அங்குட்டு’ என கூறிவிட்டு போயிருப்பார்கள் ஆனால், சசிகுமார் நான் கூறிய அனைத்திற்கும் சரி என்று சொல்லி பொறுமையாக இருந்தார்.

கேரவன் ஏறவே கூடாது என்று கூறுவேன் அதனால் ஷூட்டிங் முடிந்தும் தரையில் உட்கார்ந்து இருப்பார். இந்த படத்தில் சசிகுமார் முகத்தில் மிதிக்கும் காட்சி ஒன்று இருக்கும் அதற்கு பலர் வேண்டாம் என்றார்கள்.

ஊர்க்காரங்க மாதிரி உண்மையில் வெறிகொண்டு மிதிச்சா ஒரே ஷாட்ல ஓகே ஆகிடும் அதை செய்யாமல் நீங்கள் தயங்கினால் ஷாட் நீண்டு கொண்டே  இருக்கும் என்று கூறினேன். ஆனால் அதற்கு சசிகுமார் சார் எதுவும் சொல்லாமல் என் அருகில் நின்று கொண்டு அதைக் கேட்டுக் கொண்டிருப்பார்.

தென்னை மட்டை அவர் முதுகில் போர்ஸா விழனும். தரதரன்னு சசி சாரை இழுத்து கொண்டு போகனும், என்ற பல விஷயங்களை உண்மையாக செய்தார். அதனால் தான் இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. இவை அனைத்திற்கும் என்னை மன்னித்து விடுங்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.  

Source: https://cineulagam.com/article/director-saravanan-talk-about-sasikumar-1727512958

NO COMMENTS

Exit mobile version