மதயானைக் கூட்டம் பட புகழ் இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இன்று திடீர் மாராடைப்பால் மரணம் அடைந்தது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
அவர் ராவனக்கோட்டம் என்ற படத்தை இரண்டு வருடங்களுக்கு முன் இயக்கி இருந்தார். அதில் சாந்தனு நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மரணம்
விக்ரம் சுகுமாரன் மதுரையில் இருந்து சென்னைக்கு வந்தபோது பேருந்திலேயே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்து இருக்கிறது.
அவரது திடீர் மரணம் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கும் நிலையில் சினிமா துறையினர் மற்றும் ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
நடிகர் சாந்தனு உருக்கமாக இவருக்கு இரங்கல் தெரிவித்து இருக்கிறார்.
Source: https://cineulagam.com/article/director-vikram-sugumaran-passes-away-1748815132
