Home இலங்கை சமூகம் தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

தித்வா புயலின் கோரச் சீற்றம்: காணாமல் போகும் அபாயத்தில் இரண்டு கிராமங்கள்

0

இலங்கையில் இரண்டு கிராமங்கள் காணாமல் போகக்கூடிய அபாயத்தில் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

லக்கல, அட்டன்வல மற்றும் ரத்னிந்த ஆகிய பாரம்பரிய கிராமங்கள் இலங்கை வரைபடத்திலிருந்து முற்றிலும் மறைந்து போகும் அபாய நிலையை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவிக்கபப்டுகின்றது.

தித்வா புயலின் தாக்கத்தால், நக்கல்ஸ் மழைக்காட்டுப் பகுதியில் உள்ள மானிகல மலைத் தொடருக்கு அருகே ஏற்பட்ட மண்சரிவுகளே இந்த அபாயத்திற்கு காரணமாக அமைந்துள்ளன.

குடியிருப்பதற்கு பொருத்தமற்ற கிராமங்கள்..

ஆரம்பகட்ட புவியியல் ஆய்வுகளின் அடிப்படையில், இந்த பாரம்பரிய கிராமங்கள் குடியிருப்பதற்கு பொருத்தமற்றவை என உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் மனதை கவர்ந்த இயற்கை அழகுக்குப் பெயர் பெற்ற மானிகல மலைத் தொடரின் அடிவாரத்தில் நிலம் பிளந்ததுடன், அட்டன்வல கிராமம் முழுமையாக அபாய நிலையில் சிக்கியுள்ளது.

   

அதேபோல் ரத்னிந்த கிராமமும் அபாயத்தில் இருப்பதாகவும், அப்பகுதி மக்களை வெளியேற்ற பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாகவும் அட்டன்வல ஸ்ரீ நீக்ரோராகாம விஹாரையின் கம்பராவே சமித தேரர் தெரிவித்துள்ளார்.

அட்டன்வல கிராமத்தில் 54 குடும்பங்கள் வெளியேற்றப்படவுள்ளதுடன், அங்கு 33 வீடுகள் காணப்படுகின்றன.

விகாரை மற்றும் பல வீடுகளின் சுவர்கள், தரைகள் பிளந்து சேதமடைந்துள்ளதாகவும், ரத்னிந்த கிராமத்திலும் நிலப்பிளவுகள் ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இலங்கை வரைபடத்திலிருந்து ஏற்கனவே மறைந்த முதல் கிராமமாக லக்கல வல்பொலமுல்ல பாரம்பரிய கிராமம் குறிப்பிடப்படுகிறது.

அதே நிலை அட்டன்வல கிராமத்திற்கும் ஏற்படும் அபாயம் தற்போது உருவாகியுள்ளது.

வல்பொலமுல்ல கிராம மக்கள் போலவே, தற்போது அபாயத்தில் உள்ள அட்டன்வல கிராம மக்களும் இராவண மன்னன் யுகத்திலிருந்து தொடர்ந்துவரும் பாரம்பரிய குடிமக்கள் என தெரிவிக்கப்படுகிறது.   

NO COMMENTS

Exit mobile version