கிழக்கு மாகாண ஆளுநர் ஜயந்த லால் ரட்ணசேகர மற்றும் கிழக்கு மாகாண
அமைச்சுகள் மற்றும் திணைக்கள தலைவர்கள் இடையேயான கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.
குறித்த கலந்துரையாடலானது இன்று (01)
திருகோணமலையில் உள்ள ஆளுநர் செயலகத்தில் இடம்பெற்றுள்ளது.
கலந்துரையாடல்
இதன்போது, மாகாண சபையால் செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும்
அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்களின் மட்டத்தில் நிலவும் பிரச்சினைகள்
குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் கிழக்கு மாகாண பிரதம
செயலாளர் தலங்கமவும் இதில் கலந்து கொண்டார்.
