Home இலங்கை சமூகம் யாழ். சோமசுந்தரம் வீதியில் சிவப்பு நிற குடிநீர் : மக்கள் விசனம்

யாழ். சோமசுந்தரம் வீதியில் சிவப்பு நிற குடிநீர் : மக்கள் விசனம்

0

யாழ்ப்பாணம் (Jaffna) – மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம் பகுதிக்கு மண் கலந்த குடிநீர்
விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, “யாழ். மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் குழாய் நீர் விநியோகம் மூலம் வீடுகளுக்கு நீர் வழங்கப்படுகின்றது.

நேற்றையதினம் (27) யாழ்ப்பாணம் மாநகர சபைக்கு உட்பட்ட சோமசுந்தரம்
வீதியில் உள்ள வீடுகளுக்கு வழமையான குழாய் நீர் விநியோகிக்கப்பட்ட நிலையில்
வீடுகளில் வைக்கப்பட்டுள்ள நீர்
தாங்கிகளில் குறித்த நீர் நிரப்பப்பட்டுள்ளது.

சிவப்பு நிறமாக காட்சி அளித்த நீர் 

குறித்த பகுதியில் உள்ள வீட்டின் உரிமையாளர் ஒருவர் நீரை போத்தலில் எடுத்த
போது சிவப்பு நிறமாக காட்சி அளித்ததை அவதானித்துள்ளார்.

இந்த நிலையில் குறித்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த போது, குழாய் நீரில் ஏற்பட்ட பழுது காரணமாக
திருத்த வேலைகள் இடம்பெற்றுள்ளமை தெரியவந்துள்ளது.

திருத்த வேலையின் போது மண் உட்புகுந்த காரணத்தினால் அருகில் இருக்கும்
வீடுகளின் குடி நீரில் சிவப்பு மண் கலந்த நீர் விநியோகிக்கப்பட்டுள்ளது.

குறித்த விடயம் தொடர்பில் யாழ்ப்பாணம் மாநகர சபை ஆணையாளரை தொடர்பு கொண்ட போது
குறித்த சம்பவம் தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்துரையாடுவதாகத்
தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

செய்திகள் – பு. கஜிந்தன் 



NO COMMENTS

Exit mobile version