Home உலகம் கொலை முயற்சியிலிருந்து தப்பிய டிரம்ப் வெளியிட்ட உருக்கமான கருத்து

கொலை முயற்சியிலிருந்து தப்பிய டிரம்ப் வெளியிட்ட உருக்கமான கருத்து

0

அமெரிக்கா (USA) – பென்சில்வேனியா (Pennsylvania) தேர்தல் பேரணியில் இடம்பெற்ற படுகொலை முயற்சியிலிருந்து தப்பியமை தொடர்பில்
தனது மன உணர்வை அமெரிக்க முன்னணி ஊடகம் ஒன்றிற்கு முதல் முதலாக அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் பகிர்ந்துள்ளார்.

இதன் போது ”நான் இங்கே இருந்திருக்க முடியாது என்றும் நான் இறந்திருப்பேன்” என்றும் டிரம்ப் உணர்ச்சிபூர்வமாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், நான் தொடர்ந்து பேசவே விரும்பினேன் ஆனால் என்னை சுட்டுவிட்டார்கள் என மன உளைச்சலுடன் கூறியதுடன் இது ஒரு கற்பனைக்கு அப்பாற்பட்ட அனுபவம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பெரிய காயம்

இந்த நிலையில், தனது முழங்கையில் ஏற்பட்டுள்ள பெரிய காயத்தை செய்தியாளருக்கு காண்பித்துள்ளதுடன் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் தன்னை பாதுகாக்க முயன்றவேளை இந்த காயம் ஏற்பட்டதாக தெரிவித்துள்ளார்.

மேலும், புகைப்படங்கள் எடுக்க முயன்ற போது வலது காதை சுற்றி தளர்வான பெரும் கட்டுடன் டிரம்ப் காணப்பட்டதனால் அவரை புகைப்படங்கள் எடுக்க முடியாது என அவரது பணியாளர்கள் தெரிவித்ததாக குறி்த்த ஊடகம் கூறியுள்ளது.

NO COMMENTS

Exit mobile version