Home அமெரிக்கா நான் முட்டாள் அல்ல..! தன்னை இப்படி அழைக்குமாறு கூறிய ட்ரம்ப்..

நான் முட்டாள் அல்ல..! தன்னை இப்படி அழைக்குமாறு கூறிய ட்ரம்ப்..

0

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தன்னை முட்டாள் (dumb) என்று அழைப்பதை மிகவும் வெறுப்பதாகவும், அதற்கு எதிராக தனது அறிவாற்றலை நிரூபிக்க மருத்துவரிடம் cognitive test (அறிவாற்றல் பரிசோதனை) கேட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

வெள்ளிக்கிழமை நியூயோர்க் நகரில் தனது ஆதரவாளர்களிடம் உரையாற்றியபோது அவர் இந்த கருத்துகளை வெளியிட்டார்.

புத்திசாலியான கொடுங்கோல் சர்வாதிகாரி

“முட்டாள்” என்று அழைப்பதே தன்னை மிகவும் பாதிக்கும் அவமதிப்பு என்று ட்ரம்ப் கூறினார்.

ஆனால் அதே நேரத்தில், புத்திசாலியான கொடுங்கோல் சர்வாதிகாரி என்று அழைப்பதில் தனக்கு பிரச்சினை இல்லை என்றும் அவர் தெரிவித்தார்.

“நான் நீங்கள் சந்திக்கும் மிக புத்திசாலி மனிதன்,” என்று அவர் கூட்டத்தில் கூறினார்.

மேலும், அப்படியென்றால் நாட்டின் தலைவராக ஒரு புத்திசாலி நபரை நீங்கள் விரும்பமாட்டீர்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.

அந்த கூட்டம் முதலில் வாழ்க்கைச் செலவு தொடர்பானதாக இருந்தாலும், தனது மனநலம் குறித்த விமர்சனங்கள் மற்றும் சர்ச்சைகள் குறித்து பேசத் தொடங்கிய ட்ரம்ப், மருத்துவருடன் நடந்த உரையாடலை விவரித்தார். அவர்கள் என்னை மோசமாக தாக்கினார்கள்… அவர் ஒரு முட்டாள் மனிதர் என்று சொன்னார்கள், என்று அவர் கூறினார்.

நான் மருத்துவரிடம் சொன்னேன்: ‘என்னை புத்திசாலியான கொடுங்கோல் ஆட்சியாளர் என்று அழைத்தாலும் பரவாயில்லை, ஆனால் முட்டாள் என்று அழைக்க வேண்டாம், என்று ட்ரம்ப் நினைவுகூர்ந்தார்.

 பரிசோதனை

மேலும் அவர் கூறுகையில், “நான் மருத்துவரிடம் கேட்டேன், என்னால் ஒரு பரிசோதனை செய்ய முடியுமா? அவர் சொன்னார், cognitive test இருக்கிறது.

நான் கேட்டேன், இதை எத்தனை ஜனாதிபதிகள் எடுத்துள்ளனர்? யாரும் இல்லை என்று மருத்துவர் கூறினார்.

ட்ரம்ப் கூறியதாவது, அந்த அறிவாற்றல் பரிசோதனை ஆரம்பத்தில் எளிதாக இருந்தாலும், பின்னர் மிகவும் கடினமாக மாறுகிறது.

அவர் முன்னதாகவே பல முறை அந்த பரிசோதனையில் முழு மதிப்பெண் பெற்றதாக கூறியுள்ளார். மேலும், ஜனாதிபதி அல்லது துணை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் அனைவரும் கட்டாயமாக அறிவாற்றல் பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

 மூன்று பதவிக்காலங்கள்

இதுகுறித்து அவர் Truth Social-ல் பதிவிட்டதாவது:

ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி பதவிக்குப் போட்டியிடும் அனைவரும் முன்கூட்டியே அறிவாற்றல் பரிசோதனை செய்ய வேண்டும்; அப்படி செய்தால் தேர்தலில் ஏற்படும் ஆச்சரியங்கள் தவிர்க்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

மேலும், அவர் தனது மூன்று பதவிக்காலங்களிலும் இந்த பரிசோதனையை எடுத்ததாகவும், மூன்றிலும் முழு மதிப்பெண் பெற்றதாகவும் கூறினார்.

அமெரிக்காவின் Tufts University School of Medicine பேராசிரியர் டாக்டர் ஹென்றி டேவிட் ஆப்ரஹாம், குறுகிய காலத்தில் மூன்று முறை இந்த பரிசோதனை செய்தது கவலைக்குரியது என்று கருத்து தெரிவித்துள்ளார்.

Montreal Cognitive Assessment என்பது பொதுவாக நினைவிழப்பு (dementia) போன்ற நிலைகளை கண்டறிய பயன்படுத்தப்படும் பரிசோதனை ஆகும்.

முன்னாள் Johns Hopkins University பேராசிரியர் டாக்டர் ஜான் காட்னர், டிரம்பின் அறிவாற்றல் திறன்களில் குறைவு ஏற்படுவதற்கான அறிகுறிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் பெண்டகன் தலைவர் பீட் ஹெக்செத், ட்ரம்பின் உடல் மற்றும் மனநலத்தைப் பாராட்டி, அவரை சமீபத்திய காலத்தின் மிக கூர்மையான மற்றும் திறமையான தலைவர் என குறிப்பிட்டுள்ளார்.

Source: https://tamilwin.com/article/dont-call-me-dumb-call-me-brilliant-tyrant-dictato-1779568411

NO COMMENTS

Exit mobile version