Home இலங்கை அரசியல் யாழில் ரணிலுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள்

யாழில் ரணிலுக்கு ஆதரவாக பிரசாரத்தில் ஈடுபட்ட இரு அமைச்சர்கள்

0

ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவுக்கு (Ranil Wickremesinghe) ஆதரவு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் (Jaffna) இரண்டு அமைச்சர்கள் பிரசார நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

அதன்படி கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்த (Douglas Devananda) மற்றும் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) ஆகியோரே இன்று (07) பிரசாரத்தை முன்னெடுத்தனர்.

யாழ்ப்பாணம் பிரதானம் பேருந்து நிலையத்தை சுற்றி உள்ள வர்த்தக நிலையங்களில் ரணிலுக்கு ஆதரவான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தனர்.

ரணிலுக்கு வாக்களித்தல்

இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவிற்கு வாக்களிக்க வேண்டும் என பொதுமக்களிடம் தெரிவித்தனர்.

மேலும், சிறிலங்காவின் அடுத்த ஜனாதிபதியாக ரணில் விக்ரமசிங்க தான் வெற்றி பெறுவார் என டக்ளஸ்
தேவானந்தா மற்றும் சுசில் பிரேமஜயந்த ஆகியோர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இன்று (07) யாழ்ப்பாணம் – திருநெல்வேலி சந்தைப் பகுதியில் முன்னாள் அமைச்சர் விஜயகலா மகேஷ்வரனால் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/douglas-and-susil-election-campaign-for-ranil-jaff-1725691568

NO COMMENTS

Exit mobile version