Home இலங்கை அரசியல் வவுனியாவில் கட்சி ஆதரவாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல்

வவுனியாவில் கட்சி ஆதரவாளர்களுடன் டக்ளஸ் கலந்துரையாடல்

0

ஈழமக்கள் ஜனநாயக கட்சி (ஈபிடிபி) ஆதரவாளர்களுடன் கட்சியின் தலைவரும்,
கடற்தொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா(Douglas Devananda) சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தார்.

குறித்த சந்திப்பானது நேற்று(07.07.2024) வவுனியா பிரதேச செயலக
மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

அபிவிருத்தி நடவடிக்கைகள்

இதன்போது கட்சியன் எதிர்கால நடவடிக்கைகள், அபிவிருத்தி நடவடிக்கைகள், தேர்தலை எதிர்கொள்வது என பல்வேறு விடயங்கள் தொடர்பாக ஆதரவாளர்களின் கேள்விகளுக்கு அமைச்சர் பதில் அளித்திருந்தார்.

நாடாளுமன்ற உறுப்பினரும், வவுனியா அபிவிருத்தி குழு தலைவருமாகிய கு.திலீபன்
அவர்களின் தலைமையில் இடம்பெற்ற இந்த கலந்துரையாடலில் வவுனியா மாவட்டத்தைச்
சேர்ந்த ஈழமக்கள் ஜனநாயககட்சியின் ஆதரவாளர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

Source: https://tamilwin.com/article/douglas-talks-with-party-supporters-in-vavuniya-1720392037

NO COMMENTS

Exit mobile version