Home முக்கியச் செய்திகள் தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி!

தெய்வாதீனமாக உயிர் தப்பிய சாரதி!

0

மூதூர் காவல்துறை பிரிவிலுள்ள முன்னம்போடிவெட்டை பகுதியில் பயணித்த லொறியொன்று பாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.

இவ்விபத்தில் வாகன சாரதி மாத்திரமே பயணித்துள்ளதுடன் அவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

திருகோணமலை – மட்டக்களப்பு பிரதான வீதியில் இன்று புதன்கிழமை (17) அதிகாலை
இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

விபத்துக்கான காரணம்

கல்முனையிலிருந்து திருகோணமலைக்கு உமி ஏற்றிக்கொண்டு பயணித்தே லொறியே இந்த
அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளது.

இந்நிலையில் சாரதியின் தூக்க கலக்கமே விபத்துக்கான காரணமென தெரியவருகிறது.

விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை மூதூர் காவல்துறையினர் முன்னெடுத்துள்ளனர். 

செய்தி – புஹாரிஸ்

NO COMMENTS

Exit mobile version