Home இலங்கை சமூகம் யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்! வெளியான பின்னணி

யாழில் அதிரடியாக கைது செய்யப்பட்ட சந்தேகநபர்! வெளியான பின்னணி

0

நாவாந்துறை – மண்பிட்டி பகுதியில் நீண்ட காலமாக கஞ்சா கலந்த மாவா விற்பனையில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது, சந்தேகநபரிமிருந்து 470 கிராம் கஞ்சா கலந்த மாவா மீட்கப்பட்டது.

யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகரின் கீழ் இயங்கும் காவல்புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் யாழ்ப்பாணம் காவல் நிலைய போதை தடுப்பு பிரிவினரால் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

 

நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை

விசாரணைகளின் பின்னர், குறித்த சந்தேக நபரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர். 

NO COMMENTS

Exit mobile version