பிரதீப் ரங்கநாதனின் Dude படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்ட நிலையில், உடனே அந்த பாடல்களை நீக்க நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இந்நிலையில் பிரச்னையை முடிவுக்கு கொண்டு வர தயாரிப்பு நிறுவனம் இளையராஜா உடன் சமரசம் செய்துகொண்டிருக்கிறது.
வழக்கு முடித்து வைப்பு
தயாரிப்பாளர் இளையராஜா உடன் சமரசம் செய்துகொண்ட நிலையில் வழக்கை நீதிமன்றம் முடித்து வைத்திருக்கிறது.
இளையராஜாவுக்கு இழப்பீடு வழங்கப்படும், பாடலை பயன்படுத்தியதற்காக படத்தில் அவருக்கு நன்றி தெரிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
சர்ச்சை முடிவுக்கு வந்திருப்பதால் விரைவில் மீண்டும் டியூட் படத்தில் கருத்த மச்சான் பாடல் இடம் பெற இருக்கிறது.
