Home இலங்கை சமூகம் முதியோர் கொடுப்பனவு பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

முதியோர் கொடுப்பனவு பயனாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானம்

0

முதியோருக்கான கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சினால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கொடுப்பனவை பெற்றுக் கொள்ளும் பயனாளர்களின் எண்ணிக்கையை 10 இலட்சம் வரை அதிகரிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பிரதியமைச்சர் வசந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். 

அதிகளவு நிதி ஒதுக்கம்

அவர் மேலும் தெரிவிக்கையில்,

கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சுக்கு இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் அதிகளவான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதனூடாக சுமார் 8 இலட்சம் பேருக்கு இதுவரையில் வழங்கப்பட்ட 3000 ரூபா முதியோர் கொடுப்பனவு 5000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் முதியோர் கொடுப்பனவு பெறுவோரின் எண்ணிக்கையை 10 இலட்சமாக அதிகரிப்பதற்கும் அமைச்சு தீர்மானித்துள்ளது என குறிப்பிட்டுள்ளார். 

NO COMMENTS

Exit mobile version