Home இலங்கை சமூகம் மட்டக்களப்பில் வயோதிபர் அடித்துக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை

மட்டக்களப்பில் வயோதிபர் அடித்துக்கொலை: பொலிஸார் தீவிர விசாரணை

0

வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பள்ளத்துச்சேனை, பேரில்லாவெளி பகுதியில் வயோதிபர் ஒருவர் கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த சம்பவமானது நேற்றையதினம் (8) இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதன்போது, 63 வயதுடைய வயோதிபர் ஒருவரே இவ்வாறு அடித்துக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரிய வந்துள்ளது.

பொலிஸார் நடவடிக்கை

அத்தோடு, இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்களை  கைது செய்ய பொலிஸார் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும், கொலைக்கான காரணம் தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version