மன்னார்- பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் காணாமல் போன
முதியவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவமானது இன்று (27) இடம்பெற்றுள்ளதாக பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் மன்னார் பிரதேசம் -மடு கிராமத்தை சேர்ந்த எல்லப்பன் ராதாகிருஸ்னன் (வயது 59) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
பொலிஸார் விசாரணை
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில், குறித்த முதியோர் நேற்றையதினம் (26) வயலுக்கு சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.
இதனையடுத்து, உறவினர்கள் தேடிய நிலையில்
வயலுக்குச் செல்லும் வீதியில் குறித்த முதியவர் சடலமாக அடையாளம்
காணப்பட்டுள்ளார்.
மேலும், சம்பவம் தொடர்பாக மடு பொலிஸார் விசாரணைகளை
முன்னெடுத்துள்ளனர்.
