நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி கால திகதியை தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி எதிர்வரும் மே 3ஆம் திகதி நள்ளிரவு முதல் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான அமைதி காலம் ஆரம்பமாவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தலுக்கான பிரசாரம்
உள்ளூராட்சித் தேர்தலுக்கான பிரசாரம் எதிர்வரும் சனிக்கிழமை (03) நள்ளிரவுடன் நிறைவுபெற வேண்டும் என தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
அதன்படி, வேட்பாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தேர்தல் பிரசாரங்களில் ஈடுபடுவது முற்றாக தடை செய்யப்பட்டுள்ளது.
