Home இலங்கை சமூகம் மதுபோதையில் தேர்தல் கடமை : வான் சாரதி கைது!

மதுபோதையில் தேர்தல் கடமை : வான் சாரதி கைது!

0

தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பணியாளர்களை அழைத்துச்சென்ற வான் சாரதி ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை முன்னிட்டு வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களுடன் தெரணியகலை பிரதேசத்தில் உள்ள வாக்களிப்பு நிலையத்திற்கு பயணித்த வான் சாரதியே கைது செய்யப்பட்டவராவார்.

கடமை நேரத்தில் மதுபோதை

குறித்த சாரதி கடமை நேரத்தில் மதுபோதையில் இருந்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதன்போது, வாக்குச் சீட்டுகள், வாக்குப்பெட்டிகள் மற்றும் பணியாளர்களை வேறு வாகனத்தில் கொண்டு செல்ல அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.

தேர்தல் திணைக்களம் அறிவுறுத்தல்

வாக்களிக்க வரும்போது வாக்காளர்கள் மதுபோதையில் வருதல் ,தேவையற்ற கலகத்தில் ஈடுபடுதல் போன்றவற்றை தவிர்க்கவேண்டுமென தேர்தல் திணைக்களம் அறிவுறுத்தல் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/election-duty-van-driver-arrested-for-drunkenness-1726872623

NO COMMENTS

Exit mobile version