கொழும்பு – பேர வாவியில் கழிவுகளை சேகரிக்க மின்சார படகுகளை ஈடுபடுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மேல் மாகாண ஆளுநர் ஹனிஃப் யூசூப் தெரிவித்துள்ளார்.
பேர வாவியில் மின்சார கழிவுகளை சேகரிக்கும் படகுகளின் முதல் சோதனைகள் கடந்த
வாரம் தொடங்கப்பட்டதாக அவர்
எக்ஸ் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
சூரிய சக்தியில் இயங்கும் படகுகள்
முழுமையாக மின்சாரம், சூரிய சக்தியில் இயங்கும் இந்த படகுகள் ஒவ்வொரு நாளும்
3,000 கிலோ வரை மிதக்கும் திணமக்கழிவுகளை சேகரிக்க முடியும்.
பேர வாவயில் விரைவில் நான்கு படகுகள் இந்த பணிகளுக்காக ஈடுபடுத்தப்படவுள்ளன.
வாவியை நிரந்தரமாக மீட்டெடுக்கவும் புதுப்பிக்கவும் தாங்கள் விரைவில்
தொடங்கவிருக்கும் பல திட்டங்களில் இதுவும் ஒன்றாகும் என ஆளுநர் தெரிவித்துள்ளார்.
