Home இலங்கை சமூகம் பட்டப்பகலில் திருட்டில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது

பட்டப்பகலில் திருட்டில் ஈடுபட்ட தாயும் மகளும் கைது

0

கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் மின் உபகரணங்களைத் திருடும் மோசடியில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயையும் மகளையும் சந்தேகத்தின் பேரில் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

குறித்த இருவரும் தம்புள்ளை (Dambulla)  நகரில் வைத்து இன்று (07) பகல் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தம்புள்ளை நகரிலுள்ள கையடக்கத் தொலைபேசி விற்பனை நிலையமொன்றில் கையடக்கத் தொலைபேசியைத் திருடச் சென்ற போதே இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மேலதிக விசாரணை

கைது செய்யப்பட்ட இருவரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் போது முக்கிய நகரங்களில் உள்ள தொலைபேசி கடைகளுக்குச் சென்று இந்தக் திருட்டு சம்பவங்ளை மேற்கொண்டுள்ளமை தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில், சந்தேக நபர்கள் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Source: https://ibctamil.com/article/electrical-equipment-theft-fraud-1720348373

NO COMMENTS

Exit mobile version