Home இலங்கை சமூகம் கல்முனையில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

கல்முனையில் மின்சார சபை ஊழியர்கள் போராட்டம்

0

இலங்கை மின்சார சபை (CEB) ஊழியர்கள், கல்முனை (Kalmunai) அலுவலகத்திற்கு முன்பாக போராட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர்.

குறித்த போராட்டம் இன்றையதினம் (09.07.2024) முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது, போராட்டக்காரர்கள், 2024ஆம் ஆண்டிற்கான சம்பள உயர்வை உடனடியாக வழங்கு, சம்பள முரண்பாட்டு தீர்வை உடனடியாக வழங்கு மற்றும் வேலை நீக்கம் செய்த 62 தொழிலாளர்களை உடனடியாக சேவையில் இணைத்துக் கொள் என பல்வேறு வாசகங்கள் அடங்கிய துண்டுப்பிரசுரங்களை விநியோகித்து அமைதி வழிப்போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

இலங்கை மின்சாரத் தொழிற்சங்கம்

மேலும், மின்சார தொழிலாளர் கோரிக்கையை
நிறைவேற்ற முடியவில்லையெனில் ஆட்சியாளர்களை விரட்டியடிப்போம் என ஊடகங்களிடம் போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இதன்போது, சுமார் 50இற்கும் அதிகமான உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் பங்கேற்றிருந்ததுடன் இலங்கை மின்சாரத் தொழிற்சங்கம்
இப்போராட்டத்தை ஏற்பாடு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

NO COMMENTS

Exit mobile version