Home இலங்கை சமூகம் இலங்கை பெண்கள் வெளிநாடொன்றில் பணியாற்றும் வாய்ப்பு

இலங்கை பெண்கள் வெளிநாடொன்றில் பணியாற்றும் வாய்ப்பு

0

இலங்கை பெண்கள் தென் கொரியாவில் கடற்றொழில் துறையில் பணியாற்றும் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடற்றொழில் துறையில் தொழில் வாய்ப்பைப்பெற்ற 120 பேர் கொண்ட குழு நேற்று (25) கொரியாவுக்கு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

புரிந்துணர்வு ஒப்பந்தம்

குறித்த குழுவில் மூன்று பெண்கள் உள்ளடங்கியுள்ளதாக பணியகம் தெரிவித்துள்ளது.

தென்கொரிய அரசாங்கத்திற்கும் இலங்கை அரசாங்கத்திற்கும் இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் படி, இலங்கைக்கு இந்த தொழில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Source: https://tamilwin.com/article/employment-abroad-for-sri-lankan-women-1724677240

NO COMMENTS

Exit mobile version