Home இலங்கை குற்றம் கிளிநொச்சியில் 10 பேர் கைது

கிளிநொச்சியில் 10 பேர் கைது

0

கிளிநொச்சி(Kilinochchi) – தர்மபுரம் பொலிஸ் பிரிவில் உள்ள கல்லாறு பகுதியில் முன்னெடுக்கப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையில் 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த யுக்திய சுற்றிவளைப்பானது பொலிஸார், இராணுவத்தினர் மற்றும் சிறப்பு அதிரடிப்படையினரால் இன்று (05.07.2024) மேற்கொள்ளப்பட்டுள்ளது.

பொலிஸ் விசாரணை

இதன்போது, பல்வேறு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய பல
சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஐஸ் போதைப்பொருள், மோட்டார் சைக்கிள் ஒன்று உள்ளிட்டவை
மீட்கப்பட்டுள்ளன.

மேலும், இவர்கள் அனைவரும் பொலிஸ் விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்த
நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

NO COMMENTS

Exit mobile version