எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியலில் குணசேகரன் மற்றும் அவரது தம்பிகள் இருவரும் கைதுக்கு பயந்து ஓடி ஒளிந்து கொண்டிருக்கின்றனர். தலைமறைவாக இருக்கும் அவர்களை கைது செய்து குண்டர் சட்டத்தில் அடைக்க ஜனனி தரப்பும் தீவிர முயற்சியை எடுத்து வருகிறது.
குணசேகரனின் அம்மாவை போலீசிடம் பேசவைத்து குணசேகரன் எவ்வளவு மோசமானவர் என்பதை சொல்ல வைக்கின்றனர். அது குணசேகரன் தரப்புக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது.
இன்றைய ப்ரோமோ
தற்போது வெளியாகி இருக்கும் லேட்டஸ்ட் ப்ரோமோவில் குணசேகரன் தரப்பு இந்த பிரச்சனையில் இருந்து தப்ப ஒரு வழியை வக்கீலிடம் கேட்கின்றனர்.
அவர்களை ஒழிப்பது தான் வழி என அவரும் ஐடியா கொடுக்கிறார். சொந்த அம்மாவையும் ஒழிக்க குணசேகரன் முடிவெடுப்பாரா? ப்ரோமோவை பாருங்க.
