எதிர்நீச்சல் தொடர்கிறது
கோலங்கள் சீரியல் பரபரப்பாக இருந்ததோ இல்லையோ எதிர்நீச்சல் தொடர்கிறது பரபரப்பின் உச்சமாக உள்ளது.
அடுத்து என்ன அடுத்து என்ன என ஒவ்வொரு எபிசோடிலும் இயக்குனர் ரசிகர்களை புலம்ப வைக்கிறார். ஈஸ்வரி பற்றிய உண்மை இன்னும் வெளியே வரவில்லை, அதற்குள் தர்ஷன் திருமண பரபரப்பு வந்துவிட்டது.
திருமணத்திற்கு இன்னும் சில நாட்கள் உள்ள நிலையில் மண்டபத்தில் முன்பே ஆஜராகிவிட்டனர் குணசேகரன் குடும்பத்தினர்.
ஈசிஆரில் உள்ள தனது சொந்த வீட்டைவிட்டு வெளியேநிய சரத்குமார்-ராதிகா… ஏன் தெரியுமா?
புரொமோ
நேற்றைய எபிசோடில் ஜனனி மண்டபம் வந்தால் தர்ஷனை பார்த்துக்கொள்ளும் பொறுப்பை நான் உனக்கு கொடுக்கிறேன் என குணசேகரன் கூற அவரும் ஒப்புக் கொள்கிறார்.
மண்டபத்தில் இருக்கும் சாமியார் ஜனனி திட்டத்தை பற்றி கூற அவரோ குணசேகரன் மறைத்து வைத்திருக்கும் பெரிய பெரிய ரகசியம் எல்லாம் உங்களுக்கு தெரியும் இல்லையா அதை கூறுங்கள் என கேட்கிறார்.
அதற்கு சாமியார் குணசேகரன் குறித்த உண்மையை கூறியிருப்பதாக தெரிகிறது, இதனால் திர் அவரை அடிக்க செல்கிறார்.
அப்படி என்ன சொன்னார், என்ன நடந்தது என்பதை இன்றைய எபிசோடில் காண்போம்.
