Home இலங்கை சமூகம் சஜித்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்நுழைந்த சர்வதேச அமைப்பு

சஜித்தின் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் உள்நுழைந்த சர்வதேச அமைப்பு

0

வவுனியா (Vavuniya – வைரவ புளியங்குளத்தில் இடம்பெற்ற சஜித்தின் (Sajith Premadasa) பிரச்சாரக் கூட்டத்தில் ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவினரின் (EU Election Observation Missions) அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த தேர்தல் பிரச்சாரம் இடம்பெற்ற பகுதியில் தேர்தல் பிரச்சார செயற்பாடுகள் மற்றும் கலந்துகொண்ட மக்களுடைய செயல்பாடுகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

வழங்கப்பட்ட வாக்குறுதிகள் 

இதேவேளை அவர்கள் புகைப்படங்களையும் எடுத்துக் கொண்டதுடன் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் அரசியல்வாதிகளாலும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசாவினாலும் வழங்கப்பட்ட வாக்குறுதிகள் தொடர்பிலும் அவர்கள் குறிப்புக்களை எடுத்துக் கொண்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

மேலும் ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ஊடாக எதிர்வரும் ஜனவரி மாதத்தில் இருந்து அரச ஊழியர்களின் சம்பளத்தை 24% ஆக அதிகரிப்போமென முல்லைத்தீவு (Mullaitivu) நகரில் நேற்று (02) இடம்பெற்ற வெற்றிப்பேரணியில் கலந்துக்கொண்டு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Source: https://ibctamil.com/article/eu-election-monitoring-team-at-sajid-s-meeting-1725349816

NO COMMENTS

Exit mobile version