Home இலங்கை சமூகம் தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

தமிழர் பகுதியிலிருந்து வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்: வெளியான அதிர்ச்சி தகவல்

0

இலங்கையிலிருந்து மலேசியா ஊடாக ஐரோப்பாவிற்கு குழந்தைகளை கடத்தி செல்லும் ஒருவர் கட்டுநாயக்கவில் உள்ள குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 76 வயதான ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

 17 இலங்கை சிறுவர்களை ஐரோப்பாவிற்கு அனுப்பியதன் மூலம் அவர் மனித கடத்தல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகியுள்ள நிலையில், அவரிடம் விரிவான விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குடிவரவு குடியகல்வு திணைக்களத்தின் புலனாய்வு பிரிவின் இடர் மதிப்பீட்டு பிரிவிற்கு குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஜெனரல் ஹர்ஷ இலுக்பிட்டிய உத்தரவிட்டுள்ளார்.

உலகில் இலங்கையர்களை போன்று நல்லவர்கள் இல்லை! கொத்து ரொட்டி சர்ச்சையில் சிக்கிய சுற்றுலா பயணி நெகிழ்ச்சி

மலேசிய குடிவரவுத்திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிப்பு

அதன்படி, இலங்கை குடிவரவுத் திணைக்களத்தின் புலனாய்வுப் பிரிவின் இடர் மதிப்பீட்டுப் பிரிவின் அதிகாரிகள் அவரைக் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர் குறித்து மலேசிய குடிவரவுத் திணைக்கள அதிகாரிகளுக்கு அறிவிக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

2022 டிசம்பர் முதல் 2023 ஏப்ரல் வரை 17 இலங்கைக் குழந்தைகளை மலேசியாவிற்கு அழைத்துச் சென்றுள்ளமையும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அவர்களில் 13 சிறுவர்களின் தகவல்கள் குடிவரவு திணைக்கள பிரிவின் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

வெளிநாட்டிற்கு கடத்திச்செல்லப்பட்ட குழந்தைகள்

இந்தக் குழந்தைகளில் 08 பேர் யாழ்ப்பாணப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும், மீதமுள்ள 05 பேர் மட்டக்களப்பு பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.

இந்த குழந்தைகள் பெற்றோரிடம் இருந்து எடுக்கப்பட்டு முதலில் மலேசியாவிற்கு கொண்டு செல்லப்பட்டு, அதன் பின்னர், மலேசிய குழந்தைகளாக தேவையான ஆவணங்களைத் தயாரித்து, பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்துக்கு ஆள் கடத்தலில் ஈடுபட்டுள்ளமையும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இந்த பின்னணியில் கடந்த 25 ஆம் திகதி 14 வயது சிறுவன் ஒருவரை தந்தையுடன் மலேசியாவிற்கு அழைத்துச் செல்லவிருந்த ஒருவரை கோலாலம்பூர் விமான நிலைய குடிவரவு திணைக்கள அதிகாரிகள் கைது செய்து அவர்களை இலங்கைக்கு நாடு கடத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

இதன்படி நேற்று காலை 09.30 மணிக்கு மலேசியாவின் கோலாலம்பூரிலிருந்து ஏர் ஏசியாவின் ஏ.கே. – 047 இலக்க விமானம் மூலம் கட்டுநாயக்கா விமான நிலையத்திற்கு அனுப்பப்பட்ட அவர்கள், விமான நிலையத்தில் குடிவரவு திணைக்களத்தின் புலனாய்வு திணைக்களத்தின் இடர் மதிப்பீட்டு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கனடாவில் சூரிய கிரகணத்தை பார்வையிட்டவர்களுக்கு நேர்ந்த கதி

செங்கடலில் தொடரும் பதற்றம்: பிரிட்டன் கப்பல் மீது ஹவுதி தாக்குதல்

நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW 

NO COMMENTS

Exit mobile version